மின்கம்பியை மிதித்து பெண் பலி


மின்கம்பியை மிதித்து பெண் பலி
x
தினத்தந்தி 11 May 2022 5:53 PM GMT (Updated: 11 May 2022 5:53 PM GMT)

கண்டமங்கலத்தில் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் மின்சாரம் தாக்கி இறந்தார்.

கண்டமங்கலம் அருகே உள்ள ஏரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். அவரது மனைவி மனோன்மணி (வயது 53). இவர் பள்ளி புதுப்பட்டு கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு சென்றார். 
அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மனோன்மணி துடிதுடித்து இறந்து போனார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கண்டமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் மனோன்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story