21 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


21 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x

21 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆலங்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 50 கிலோ கொண்ட 21 மூடை ரேஷன் அரிசி இருந்தது. அதனை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் வேனை ஓட்டி வந்த சேத்தூர் இந்திரா நகரை சேர்ந்த ஜெயபால் (வயது 28) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அரிசி மூடைகள் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த மாவு மில் அதிபர் முத்து என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மாவு மில் அதிபர் முத்து மற்றும் வேன் டிரைவர் ஜெயபால் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர். முத்துவை தேடி வருகின்றனர்.



Next Story