ரூ.21¾ லட்சத்தில் மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு ஸ்கூட்டர்


ரூ.21¾ லட்சத்தில் மாற்றுத்திறனாளிகள்  25 பேருக்கு ஸ்கூட்டர்
x

ரூ.21¾ லட்சம் மதிப்பில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ரூ.21¾ லட்சம் மதிப்பில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நலத்திட்ட உதவிகள்

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக உடல் இயக்கம் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் மற்றும் தண்டுவட மரபு நோய் உள்ளிட்ட நாட்பட்ட நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கடந்த அக்டோபர் மாதம் வரை ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 48 வழங்கப்பட்டுள்ளது. அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களை பராமரித்து கொள்ள ஏதுவாக ரூ.1,000-ம் வீதம் 54 பயனாளிகளுக்கு ரூ.54 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 25 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 81 ஆயிரத்து 75 மதிப்பிலும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் 13 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலும், வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய கைபேசிகள் 97 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.

தையல் எந்திரம்

மேலும் விலையில்லா இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் 41 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 450 மதிப்பிலும், சக்கர நாற்காலி 8 பயனாளிகளுக்கும், சி.பி.சக்கர நாற்காலி 12 பயனாளிகளுக்கும், ஊன்றுகோல் 20 பயனாளிகளுக்கும், பிரைலி கைெகடிகாரம் 8 பயனாளிகளுக்கும், மடக்கு குச்சி மற்றும் கண் கண்ணாடி 30 பயனாளிகளுக்கும், காலிபர் 11 பயனாளிகளுக்கும், காதொலி கருவி 40 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதோடு, இலவச பஸ் பயண அட்டை 2029 மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏப்ரல் 2022 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 1337 நபர்களுக்கும், மத்திய அரசின் யு.டி.ஐ.டி. அட்டை 10 ஆயிரத்து 53 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story