மது விற்ற 22 பேர் கைது


மது விற்ற 22 பேர் கைது
x

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள், கஞ்சா போன்றவற்றை விற்பனை செய்வோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த 13-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் நடத்திய தீவிர சோதனையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 163 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story