காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 22 பேர் காயம்


காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 22 பேர் காயம்
x

கரசமங்கலத்தில் அரியூரில் நடந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 44 பேர் காயமடைந்தனர்.

வேலூர்

காட்பாடி

கரசமங்கலத்தில் அரியூரில் நடந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 44 பேர் காயமடைந்தனர்.

மாடு விடும் திருவிழா

காட்பாடியை அடுத்த கரசமங்கலம் கிராமத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு இன்று காளைவிடும் திருவிழா நடந்தது. இதையொட்டி கரசமங்கலம் சாலையின் இருபுறமும் மூங்கில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டிருந்தன.

காலையில் காளைவிடும் திருவிழாவை வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார். காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார்.

இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 180 காளைகள் கலந்து கொண்டன. இதனை பார்க்க வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் கரசமங்கலம் கிராமத்திற்கு வந்தனர்.

சாலைகளில் மட்டுமல்லாது வீடுகளின் மொட்டை மாடி, படிகள், கூரை மீதும், கட்டிடங்கள் மேலேயும் நின்று காளைகள் சீறி செல்வதை பொதுமக்கள் ரசித்து வேடிக்கை பார்த்தனர்.

சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் காளைகளை கைதட்டி உற்சாகப்படுத்தினர். குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டது.

முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.50 ஆயிரம் என மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டன.

22 பேர் காயம்

மாடுகள் முட்டியதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 22 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 19 பேருக்கு சிறுகாயம் என்பதால் அங்கேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க லத்தேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story