வாலிபருக்கு 25 ஆண்டு சிறைதண்டனை


வாலிபருக்கு 25 ஆண்டு சிறைதண்டனை
x

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கையைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 25) கூலி தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவருடைய வீட்டிற்கு டியூஷன் படிக்க வந்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது தொடர்பாக அந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வரனை கைது செய்தனர்.அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேஸ்வரனுக்கு 25 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story