வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இன்று 25,000 பேர் வருகை!


வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இன்று 25,000 பேர் வருகை!
x

பூங்காவுக்கு இன்று மட்டும் 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை,

இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வருகின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பூங்காவுக்கு இன்று மட்டும் 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

இதனிடையே கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் முழுவதும் அனைத்து நாட்களும் பூங்கா திறந்து இருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story