2600 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு


2600 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு
x

கல்வராயன் மலையில் 2600 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன் மலையில் உள்ள கிளாக்காடு கிராமம் அருகே ஆத்தூரான் கொட்டாய் வனப்பகுதியில் பொன்னுசாமி மகன் சுரேஷ், ராமன் மகன் ரவிந்திரன் ஆகியோர் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கரியாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது அங்கு 2,600 லிட்டர் சாராய உறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை தரையில் கொட்டி அழித்த போலீசார் இது தொடர்பாக சுரேஷ் மற்றும் ரவிந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story