கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி


கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
x

பர்கூர் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

கூலித்தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சிகரலப்பள்ளி பக்கமுள்ள கல்லேத்துப்பட்டியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இருந்து தபால்மேட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் வீராசாமி மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பர்கூர் ஜெகதேவி சாலை நேரு நகரை சேர்ந்தவர் சரவணன் (40). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகில் அவர் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்று விட்டது. இந்த விபத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கல்லூரி மாணவர்

பர்கூர் அருகே உள்ள சிந்தகம்பள்ளி 9 பனை மரம் பகுதியை சேர்ந்தவர் வினோ (22). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அந்த பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது சின்னகாரகுப்பத்தில் இருந்து காரகுப்பம் நோக்கி வந்த ஸ்கூட்டர் மாணவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வினோவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் வினோ மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாபமாக இறந்தார். இந்த 3 விபத்துகள் குறித்தும் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story