பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 334 மனுக்கள் பெறப்பட்டன


பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 334 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 20 Dec 2022 6:45 PM GMT (Updated: 20 Dec 2022 6:47 PM GMT)

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 334 மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று 32 மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் தொடர்பாக 302 மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

பின்னர் அந்த மனுக்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story