35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி


35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி
x

நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி

நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நேரடி விதைப்பாக 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் தற்போது வளர்ச்சி நிலையில் 25 முதல் 35 நாள் வயதில் உள்ளது.

இந்த நிலையில் மேலுரமாக ஏக்கருக்கு 22.5 கிலோ யூரியா மற்றும் 50 கிலோ டி.ஏ.பி. தெளிக்க வேண்டும். யூரியாவிற்கு மாற்றாக நானோ யூரியா ஒரு ஏக்கருக்கு 500 மில்லி லிட்டர் தெளிக்கலாம். டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் கூட்டு உரங்களை தெளிக்கலாம்.

மாற்று உரங்களை...

பொட்டாஷ் உரத்திற்கு ஆலைக்கழிவுகள் மூலம் பெறப்படும் பொட்டாஷ் இடலாம். நெற்பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் மாற்று உரங்களில்(தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து) இருப்பதால் தற்போது அனைத்து தனியார் உரக்கடைகளிலும் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.எனவே நாகை மாவட்ட விவசாயிகள் மாற்று உரங்களை உரிய முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story