மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x

மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

வடகாடு அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குரும்பிவயல் அக்னி ஆறு பகுதிகளில் இருந்து 5 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசார் கண்டதும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடினர். இதையடுத்து, 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய கருக்காகுறிச்சி, மஞ்சுக்காடு பகுதிகளை சேர்ந்த ராஜேந்திரன், அய்யாவு, மகேஷ், பரிமளம், நடேசன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story