தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
x
திருப்பூர்

திருப்பூர்:

திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளியான சரவணன் (வயது 50) என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு 8 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சரவணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். சிறப்பாக புலன் விசாரணை செய்த அனைத்து மகளிர் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டினார்.


Next Story