குறைதீர்க்கும் கூட்டத்தில் 507 மனுக்கள் பெறப்பட்டன


குறைதீர்க்கும் கூட்டத்தில் 507 மனுக்கள் பெறப்பட்டன
x

குறைதீர்க்கும் கூட்டத்தில் 507 மனுக்கள் பெறப்பட்டன

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 507 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது விசாரணை செய்து, நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அவர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரத்தநாடு வட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மாதாந்திர உதவி ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையையும், தஞ்சை வட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும், பெருமகளூர் பேரூராட்சியில் கருணை அடிப்படையில் ஒருவருக்கு தூய்மை பணியாளருக்கான பணி நியமன ஆணையையும் வழங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story