கஞ்சா விற்ற 6 பேர் கைது


கஞ்சா விற்ற 6 பேர் கைது
x

கங்கை கொண்டான், திசையன்விளை பகுதியில் கஞ்சா விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் தலைமையில் போலீசார், கரிசல்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை வழிமறித்து விசாரித்தனர். இதில், அவர்கள் வெங்கடாசலபுரம் வடக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது 39), அண்ணா நகரைச் சேர்ந்த லட்சுமணன் (21), கங்கைகொண்டான் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜய் அபினாஷ் (21), விக்னேஷ் (22) என்பதும், அவர்கள் விற்பனை செய்வதற்காக 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் ேபாலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திசையன்விளை போலீசார் அழகப்பபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்றதாக நன்னிகுளம் வடக்குத்தெரு முரளி (வயது 24), இட்டமொழி அம்பேத்கர் நகர் சுதர்சன் (25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story