மது விற்ற 62 பேர் கைது


மது விற்ற 62 பேர் கைது
x

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி கடந்த 23-ந்தேதி முதல் நேற்று வரை போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட 62 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 484 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story