ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.72 லட்சம் வருவாய்


ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.72 லட்சம் வருவாய்
x

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.72 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

திருச்சி

உலக புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நாடுமுழுவதும் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இக்கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ.72 லட்சத்து 701 ரொக்கமும், 233 கிராம் தங்கமும், 1,432 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 372 -ம் இருந்தது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.


Next Story