பொது இடங்களில் புகை பிடித்த 8 பேருக்கு அபராதம்

சங்கராபுரத்தில் பொது இடங்களில் புகை பிடித்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவின் பேரில் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில், பாலமுருகன், குணதீபன், ராமச்சந்திரன் ஆகியோரை கொண்ட குழுவினர் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பொது இடத்தில் புகை பிடித்துக் கொண்டிருந்த 8 பேருக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் பொது இடங்களில் புகை பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். மேலும் புகையிலை பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story