தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்


தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
x

தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் இன்று பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, தமிழக காவல் துறையின் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி சங்கரை சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல் தலைமையக ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த வெங்கட்ராமன், கூடுதலாக நிர்வாகப் பிரிவையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊர்க்காவல் படை, கமாண்டோ படை ஏடிஜிபியான ஜெயராம், ஆயுதப்படை ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் .

தமிழக காவல் துறையின் பயிற்சி பள்ளி மற்றும் அகாடமிகளை டிஜிபி சைலேந்திரபாபு கூடுதல் பொறுப்பாக கவனித்துக் கொள்வார். இதேபோல், கோவை சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக செயல்பட்டு வந்த மதிவாணன், போக்குவரத்து பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* கோவை போக்குவரத்துப் பிரிவில் இருந்த அசோக்குமார், சென்னை சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

*கடலோர காவல் படையின் துணை ஆணையர் செல்வக்குமார், தமிழ்நாடு கமாண்டோ படையின் எஸ்பியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story