சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது- ரூ.59 ஆயிரம் பறிமுதல்


சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது-   ரூ.59 ஆயிரம் பறிமுதல்
x

ஓட்டலில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.59 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

ஓட்டலில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.59 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே ஒரு ஓட்டலில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அந்த ஓட்டலில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 9 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், உறையூரை சேர்ந்த காளிமுத்து, தங்கவேல், செந்தில்மணி, பன்னீர்செல்வம், மணிகண்டன் உள்பட 9 பேர் என தெரியவந்தது.

கைது

இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 சீட்டுக்கட்டு, ரூ.59 ஆயிரத்து 330-ஐ பறிமுதல் செய்தனர்.


Next Story