அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.98½ லட்சம் உண்டியல் காணிக்கை


அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.98½ லட்சம் உண்டியல் காணிக்கை
x

அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.98½ லட்சம் உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டு இருந்தது.

திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.98½ லட்சம் உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டு இருந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கடந்த 28-ந் தேதி மாலையில் தொடங்கி 29-ந் தேதி மாலையில் நிறைவடைந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாத பவுர்ணமிக்கான உண்டியல் எண்ணும் பணி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் உண்டியல் காணிக்கையாக 135 கிராம் தங்கம், 1 கிலோ 75 கிராம் வெள்ளி, ரூ.98 லட்சத்து 59 ஆயிரத்து 822 ரொக்கம் இருந்தது. மேலும் நேற்றுடன் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்ற இயலாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்த உண்டியல் எண்ணும் பணியின் போது ஐந்து 2 ஆயிரம் நோட்டுகள் 5 இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story