விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் ஏரிக்குள் பாய்ந்தது
விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் ஏரிக்குள் பாய்ந்தது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தன்னுடைய குடும்பத்துடன் காரில் வேளாங்கண்ணிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். மங்கலம்பேட்டை அடுத்த வயலூர் பகுதியில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இவர்கள் சென்ற கார் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த ஏரிக்குள் பாய்ந்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள், விரைந்து வந்து ஒருபுறமாக சாய்ந்து கிடந்த காரை தூக்கி நிமிர்த்தினர். பின்னர் காருக்குள் இருந்த ஆரோக்கிய ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டனர். ஏரியில் தண்ணீர் இல்லாததால், அனைவரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். மோட்டார் சைக்கிளில் சென்ற செம்பளாக்குறிச்சியை சேந்த விஜய் காயமடைந்ததால் அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.