கழிவுநீர் வாருகாலில் தவறி விழுந்து சுமைதூக்கும் தொழிலாளி சாவு


கழிவுநீர் வாருகாலில் தவறி விழுந்து சுமைதூக்கும் தொழிலாளி சாவு
x

கழிவுநீர் வாருகாலில் தவறி விழுந்து சுமைதூக்கும் தொழிலாளி சாவு

விருதுநகர்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை பூக்கடை பஜாரில் உள்ள கழிவு நீர் செல்லும் வாருகாலில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கழிவுநீர் வாருகாலில் இறந்து கிடந்த முதியவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து கிடந்த முதியவர் அருப்புக்கோட்டை குழிவிட்டார் தெருவை சேர்ந்த சுமைதூக்கும் ெதாழிலாளி சங்கர் கணேஷ் (வயது 52) என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது சகோதரி சாந்தி பாக்கியலட்சுமி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story