நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது


நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
x

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

கெங்கவல்லி:

கெங்கவல்லி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் நேற்று கடம்பூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது பணஞ்சாலை பகுதியில் இருந்து ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர் கடம்பூர் பகுதியை சேர்ந்த சின்னமணி (வயது 36) என்பதும், முயல் வேட்டைக்காக நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னமணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story