மனநலம் பாதித்தவர் விஷம் குடித்து சாவு


மனநலம் பாதித்தவர் விஷம் குடித்து சாவு
x

ஆரணி அருகே மனநலம் பாதித்தவர் விஷம் குடித்ததில் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித் பிரசாந்த் என்பவரின் மகன் நரேந்திரன் (வயது 37), சற்று மனநலம் பாதித்தவர். இவர் கடந்த 16-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நரேந்திரனின் சகோதரர் ராஜேந்திர பிரசாத் ஆரணி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story