தேவதானப்பட்டி அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை


தேவதானப்பட்டி அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை
x

தேவதானப்பட்டி அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் ராமு (வயது 60). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு உடல்நலம் சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராமு நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமு நேற்று இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story