தேவதானப்பட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை


தேவதானப்பட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x

தேவதானப்பட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் திட்டடியான் (வயது 77). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட திட்டடியான் சம்பவத்தன்று விஷம் குடித்தார்.

இதில், மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story