புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
நெல்லையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை டவுன் பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலமாடவீதி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் டவுன் பண்டிதர் தெருவை சேர்ந்த தினகரன் (வயது 66) என்பதும், அவர் தடை செய்யப்பபட்ட சுமார் 4.5 கிலோ புகையிலை பொருட்கள் வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story