புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது


புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
x

முன்னீர்பள்ளத்தில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

முன்னீர்பள்ளம்:

முன்னீர்பள்ளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மருதுக்குட்டி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோபாலசமுத்திரத்தை சேர்ந்த சிவராமன் (வயது 29) என்பவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள அவரது கடையில் சோதனை செய்தனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் சிவராமனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story