வாளுடன் சுற்றி திரிந்தவர் கைது


வாளுடன் சுற்றி திரிந்தவர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2023 7:00 PM GMT (Updated: 16 Jun 2023 7:00 PM GMT)

நெல்லையில் வாளுடன் சுற்றி திரிந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேற்கு ரத வீதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஒருவர் வாளுடன் சுற்றி திரிந்துள்ளார். உடனே போலீசார் அவரிடம் விசாரணை நடத்த சென்றனர். அப்போது அவர் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தாராம்.

இதையடுத்து போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நெல்லை டவுன் வேணுவனகுமாரசாமி கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கி மகன் ராஜகுரு (வயது 39) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து வாளை பறிமுதல் செய்தனர்.


Next Story