அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி


அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி
x

அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலுர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், தொண்டப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலையூரில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சி யினை 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். அவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


Next Story