திருப்பரங்குன்றத்தில் மேற்கூரை இல்லாத பயணிகள் நிழற்குடை


திருப்பரங்குன்றத்தில் மேற்கூரை இல்லாத பயணிகள் நிழற்குடை
x

திருப்பரங்குன்றத்தில் பயணிகள் நிழற்குடை மேற்கூரை இல்லாமல் உள்ளது.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்புறம் மதுரை மாநகராட்சி நுழைவு தோரணவாயில் வளாகத்தில் பஸ் நிறுத்தம் அமைந்து உள்ளது. அதில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், உள்ளூர் பொதுமக்களும் பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ்சில் ஏறி செல்வதற்கு வசதியாக அந்த நிழற்குடை பயனாக இருந்து வந்தது. ஆனால் தற்போது மேல்புறம் பொருத்தப்பட்டு இருந்த மேற்கூரை இன்றி அந்த நிழற்குடை காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் பஸ்சுக்காக இங்கு காத்திருக்கவேண்டிய பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த அவலநிலை பல மாதங்களாக இருந்து வரும் நிலையில் அதிகாரிகள் பாராமுகமாக இருந்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story