சலவை எந்திரத்துக்குள் புகுந்த பாம்பு


சலவை எந்திரத்துக்குள் புகுந்த பாம்பு
x

சின்னாளப்பட்டியில் சலவை எந்திரத்துக்குள் பாம்பு புகுந்தது.

திண்டுக்கல்

சின்னாளப்பட்டி அருகே உள்ள கலைமகள் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனால் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் புனித்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மணிகண்டனின் வீட்டுக்குள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு படையினர் பாம்பை தேடினர். அப்போது அவரது வீட்டில் இருந்த பழைய சலவை எந்திரத்துக்குள் அந்த பாம்பு புகுந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சலவை எந்திரத்தை, தீயணைப்பு படையினர் தூக்கி வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது சலவை எந்திரத்தில் இருந்து பாம்பு தப்பி ஓட முயன்றது. இதனை கண்ட தீயணைப்பு படைவீரர்கள், அந்த பாம்பை லாவகமாக மடக்கி பிடித்தனர். அந்த பாம்பு, கொடிய விஷம் கொண்ட கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்தது என்றும், அது 5 அடி நீளம் இருந்தது என்றும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். பிடிபட்ட பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் தீயணைப்பு படையினர் விட்டனர்.


Next Story