தையல் தொழிலாளி தற்கொலை


தையல் தொழிலாளி தற்கொலை
x

தையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கரூர் காந்திகிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் தனபாக்கியம் (வயது 68). தையல் தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட தனபாக்கியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தனபாக்கியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story