புதுப்பேட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


புதுப்பேட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:45 PM GMT)

புதுப்பேட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் உதயகுமார் (வயது 19). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்துவிட்டு தனது தந்தையுடன் விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் உதயகுமார், நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏர் கலப்பை உடைந்து விட்டதாக தெரிகிறது. இதைபார்த்த பாஸ்கரன் உதயகுமாரை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த உதயகுமார், வீட்டில் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story