மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு


மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
x

தாழையூத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லையை அடுத்த தாழையூத்து வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). கூலி தொழிலாளி. இவருைடய உறவினர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். சம்பவத்தன்று அந்த வீட்டின் மாடியில் மணிகண்டன் தூங்கினார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story