மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

தாழையூத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.
நெல்லையை அடுத்த தாழையூத்து வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). கூலி தொழிலாளி. இவருைடய உறவினர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். சம்பவத்தன்று அந்த வீட்டின் மாடியில் மணிகண்டன் தூங்கினார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





