விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் இல்லத்தார் தெற்கு தெருவை சேர்ந்தவர் மசூது மகன் ஜாபர் சாதிக் (வயது 20). இவர் சம்பவத்தன்று தென்காசியில் இருந்து கடையநல்லூருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். ஈனா விலக்கு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜாபர் சாதிக், பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்ததும் இலத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். ஜாபர் சாதிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story