மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x

பேட்டையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை கல்கட்டு தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர். இவருடைய மகன் சேக் மைதீன் (வயது 18). பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் பேட்டை எம்.ஜி.பி. 2-வது வடக்கு தெருவை சேர்ந்த மைதீன் மகன் முகமது ரியாஸ் (19). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பழைய பேட்டை இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஷேக் மைதீன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காயம் அடைந்த முகமது ரியாசை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சேக் மைதீன் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story