மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 14 Nov 2022 7:52 PM GMT (Updated: 14 Nov 2022 8:07 PM GMT)

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு கக்கன்நகரை சேர்ந்தவர் மால்ராஜ். கூலி தொழிலாளி. இவருடைய மகன் அய்யப்பன் (வயது 17). இவர் களக்காட்டில் உள்ள கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார். தினசரி அய்யப்பன் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். அதன்படி கடந்த 12-ந் தேதி இரவில் வேலை முடிந்ததும் அய்யப்பன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். களக்காடு பெருமாள் கோவில் அருகே வந்த போது நாய் குறுக்கே பாய்ந்துள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் அய்யப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அய்யப்பன் இறந்தார். இதுபற்றி களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் விசாரணை நடத்தினார்.


Next Story