டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி தொழிலாளி பலி


டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 21 May 2023 6:45 PM GMT (Updated: 21 May 2023 6:45 PM GMT)

வேப்பூர் அருகே டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

ராமநத்தம்,

வேப்பூர் அடுத்த வரம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் தங்கபிரகாஷ் (வயது 37). தொழிலாளியான இவா் தனது மனைவி மகேஸ்வரியுடன்(30) கண்டப்பங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பெண்ணாடத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்று கொண்டிருந்த தங்கபிரகாஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்கபிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதியதில் மனைவி கண்முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story