இளம்பெண் மாயம்


இளம்பெண் மாயம்
x

ஆம்பூர் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம் பெண். இவர் அங்குள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கம், உறவினர் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து உமராபாத் போலீசில் பெண்ணின் தந்தை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story