வடமதுரை அருகே வாகனம் மோதிய வாலிபர் பலி


வடமதுரை அருகே வாகனம் மோதிய வாலிபர் பலி
x
தினத்தந்தி 28 March 2023 8:45 PM GMT (Updated: 28 March 2023 8:45 PM GMT)

வடமதுரை அருகே வாகனம் மோதிய வாலிபர் பலியானார்.

திண்டுக்கல்

வடமதுரையில் இருந்து எரியோடு செல்லும் சாலையில், பாலக்குறிச்சி பிரிவு பகுதியில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அந்த வாலிபர் இறந்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து சித்துவார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் காளியம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story