பேரையூர் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து; இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி


பேரையூர் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து; இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி
x

பேரையூர் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

மதுரை

பேரையூர்,

பேரையூர் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

திருமணத்திற்கு சென்றனர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா முதலிப்பட்டியை சேர்ந்தவர் காளிரத்தினம் (வயது 60). இவரது மனைவி மாரியம்மாள் (50). சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் பேரையூர் அருகே உள்ள சாப்டூரில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர்.

பின்னர் மீண்டும் முதலிபட்டிக்கு செல்வதற்காக எம்.சுப்புலாபுரம்-எரிச்சநத்தம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

சாவு

அப்போது சாலையில் குறுக்கே நாய் ஒன்று வந்தது. அப்போது நாய் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். அதில் காளிரத்தினம், மாரியம்மாளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும், சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சையில் இருந்த காளிரத்தினம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மாரியம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story