சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து


சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து
x
தினத்தந்தி 25 Dec 2022 7:15 PM GMT (Updated: 26 Dec 2022 7:17 AM GMT)

சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் உள்ள மண்ணுழி கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலைக்கு தென்புறத்தில் ஆபத்தான வளைவு பகுதி உள்ளது. இந்த வளைப்பகுதியில் சாலையோரத்தில் தினமும் கனரக லாரிகள் ஏராளமானவை நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. மேலும் அந்த இடத்தில் எந்த வேகத்தடையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வளைவுபகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story