தடகள போட்டியில் அரசு பள்ளி மாணவன் சாதனை


தடகள போட்டியில் அரசு பள்ளி மாணவன் சாதனை
x

தடகள போட்டியில் அரசு பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

கரூர்

கரூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர் நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் விஷ்ணு கலந்துகொண்டு உயரம் தாண்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவனை புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சித் தலைவர் ரூபா, பள்ளி தலைமை ஆசிரியர், பேரூராட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.


Next Story