பயிற்சி பெற ஆதிதிராவிடர்- பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


பயிற்சி பெற ஆதிதிராவிடர்- பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

பயிற்சி பெற ஆதிதிராவிடர்- பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சியை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெற ஆஸ்பைரிங் மைன்ட்ஸ் கம்ப்யூட்டர் அடாப்டிவ் டெஸ்ட்(ஏ.எம்.சி.ஏ.டி.) பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சி பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மூன்று மாதம் நடைபெறும் இந்த பயிற்சிக்கான அனைத்து செலவும் தாட்கோவால் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, ஏ.எம்.சி.ஏ.டி. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம். எனவே இப்பயிற்சிக்கு தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விருப்பமுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story