கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு


கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:45 PM GMT)

திருவாரூரில் 21-ந்தேதி நடைபெற இருந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கபபடுவதாக பி.ஆர். பாண்டியன் அறிவித்துள்ளார்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

பெருந்தரக்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குகலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். போராட்டக்குழு சார்பில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் முற்றுகை போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பிஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பெருந்தரக்குடியில் இயற்கை எரிவாயு கிணறை தோண்ட எடுக்கும் முயற்சியை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 21-ந் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தோம். இந்த நிலையில் தற்போது நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே அதன் அடிப்படையில் எந்த ஒரு அனுமதியையும் மாவட்ட நிர்வாகம் வழங்காது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனை எழுத்துப்பூர்வமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று 21-ந்தேதி நடைபெற இருந்த முற்றுகை போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story