அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

செம்பனார்கோவிலில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து ஒன்றிய அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனம் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பவுன்ராஜ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில் ஒன்றிய குழு தலைவர் தலையிடுவதை கண்டிப்பது. மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டம் 2022-23-ம் ஆண்டிற்கான திட்டங்களை ஒருதலைபட்சமாக அரசியல் பாகுபாடுடன் வழங்கப்பட்டு வருவதை மறுபரிசீலனை செய்து அந்தந்த ஊராட்சி தலைவர்களுக்கே வழங்க வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு ஒன்றிய பொதுநிதியிலிருந்து வழங்க வேண்டிய தொகையை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக செம்பனார்கோவில் மேல முக்கூட்டில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.








Next Story