கருத்தாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்


கருத்தாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:46 PM GMT)

கருத்தாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை


சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துச்சாமி, கணேசன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் வரவேற்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொருளாளர் ஜீவானந்தம் நோக்க உரையாற்றினார். வானவில் மன்றம் சார்பாக பள்ளி அளவில் ஒன்றிய, மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் குறித்து பள்ளி துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் விளக்கி பேசினார். மாணவர்களிடம் ஏற்படும் அறிவியல் மனப்பான்மை குறித்து காளையார்கோவில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் சேவற்கொடியோன் பேசினார். முடிவில் எய்ட் இந்தியா ஒருங்கிணைப்பாளர் ரஹமத்நிஷா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் காளையார்கோவில், சிவகங்கை, இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம், எஸ்.புதூர், திருப்பத்தூர், சிங்கம்புணரி, சாக்கோட்டை, தேவகோட்டை, கண்ணங்குடி, கல்லல் ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஸ்டெம் கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story