வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் ஜெய்கணேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் அரியலூரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், தூத்துக்குடியை ேசர்ந்த சாமிநாதன், தர்மபுரியை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இதை கண்டித்தும், ராஜஸ்தான் மாநிலம் வக்கீல்களின் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியதை போல் தமிழகத்திலும் நிறைவேற்ற கோரியும் புதுக்கோட்டை, இலுப்பூர், ஆலங்குடியில் நேற்று ஒரு நாள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.


Next Story